Ad Widget

காங்கேசன்துறையில் தூக்கிட்ட நிலையில் இளைஞன் சடலம்!

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மதியம் ஒரு மணியளவில் காங்கேசன்துறை தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பளை சேர்ந்த மகேந்திரராசா மயூரன் (வயது-28) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணியில் உள்ள குடிசையினை பார்வையிட செல்வதாக கூறிச் சென்ற நிலையில், தமது மகனை காணாத குடும்பத்தினர் அவரை தேடிய வேளையில் மேற்படி காணியில் உள்ள குடிசையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதனா வைத் தியசாலைகள் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts