தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2015 டிசம்பர் மாதம் கனடா உறங்கா விழிகள் அமைப்பு 245000 பெறுமதியான உதவிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கியுள்ளது.
மேற்படி உதவிகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் பாடசாலைக்கல்வி, மருத்துவ சிகிச்சை, வாழ்வாதாரம் போன்ற தேவைகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளாகவும் கல்வி உபகரஙணங்கள் வழங்குதல் மற்றும் இலவசக் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் இருந்து தனது பணிகளை தாயக மக்களுக்காக மேற்கொண்டுவரும் மேற்படி அமைப்பானது கடந்த ஐந்து ஆண்டுகாளாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிபாரிசுகளுக்கு அமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கிவந்துள்ளது.