ஊடகவியலாளர்களுக்காக கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் மூலம் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 2500 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பான அனைத்து வேலைகளும் நிதியமைச்சினால் முன்னெடுக்ப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஊடகவியலாளர்கள் தமக்கு விருப்பமான மோட்டார் சைக்கிள்களை தெரிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும். இக் கடன் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போது முக்கிய தகுதிகளாக ஊடகத்துறையில் 05 வருடங்களுக்கு மேல் பணியாற்றியிருத்தல், இலங்கைப் பிரஜையாக இருத்தல் ஆகியன கொள்ளப்பட்டன. அவ்வகையில் அதிகமானோர் இவற்றுக்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.