Ad Widget

எட்டு மதுபான நிலையங்களுக்கு சீல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் முறைகேடாக இயங்கி வந்த எட்டு மதுபான நிலையங்களுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த மதுவரி திணைக்கள உயர் அதிகாரிகள் தலமையிலான குழுவினர், குறித்த மதுபான நிவையங்களுக்கு சீல் வைத்துச் சென்றதாக மதுவரி திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிய 3 மதுபான நிலையங்கள், ஊர்காவற்துறையில் 2, சுன்னாகத்தில் 1, புலோலியில் 1, புத்தூர் சுன்னாகம் வீதியில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஆகியவற்றுக்கே இவ்வாறு சீல்வைக்கப்பட்டுள்ளதாக அவ் அதிகாரி கூறினார்.

உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமை, விற்பனை பற்றுச்சீட்டுக்களை முறையாக பேணாமை, வாடிக்கையாளர்களுக்கு அதிக விலையில் மதுபானங்களை விற்பனை செய்தமை, சில்லறை விலையில் சீல் உடைத்து விற்பனை செய்தமை ஆகிய குற்றச்செயல்களுக்காக இவை மூடப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, ‘யாழ். மாவட்டத்தில் மதுபான விற்பனை நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள், மற்றும் விலை அதிகரித்து விற்பனை செய்வது தொடர்பில் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள மதுவரி நிலையங்களுக்கு அறிவித்தால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கபடும்’ என அவ் அதிகாரி மேலும் கூறினார்.

Related Posts