உழவு இயந்திரம் மோதி சிறுவர்கள் படுகாயம்

சாவகச்சேரி, பெருக்குளம் சந்தியில் சைக்கிளில் சென்றவர்களை உழவு இயந்திரம், புதன்கிழமை (03) மாலை மோதியதில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயரூபன் சாரூஜன் (வயது 6), ஜெயரூபன் அஸ்வின் (வயது 1) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

தந்தையுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, உழவு இயந்திரம் இவர்கள் மீது மோதியுள்ளது.

Related Posts