Ad Widget

உலகில் குறைந்த செலவுடன் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடிய நாடு இலங்கை!

மிகவும் குறைந்த செலவுடன் அலைபேசியை பயன்படுத்தக் கூடிய நாடாக இலங்கை திகழ்கின்றது. அலைபேசி ஒன்றை பயன்படுத்த மிகவும் குறைந்த மாதாந்த செலவினைக் கொண்ட நாடு இலங்கையாகும்.

இதன்படி. இலங்கையில் 0.97 அமெரிக்க டொலரைக் கொண்டு அலைபேசி ஒன்றை ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்த முடியும் என சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

உலக சனத்தொகையில் பத்து பேரில் எட்டு பேரிடம் அலைபேசி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகளவில் அலைபேசிகள் பயன்படுத்தப்பட்டாலும், இலங்கையிலேயே அலைபேசிக்கான செலவுகள் மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

பங்களாதேஸ், ஈரான், பாகிஸ்தான், நேபாளம், இந்தியா, பூட்டான், மொங்கோலியா, எதியோப்பியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு அடுத்த நிலைகளை வகிக்கின்றன.

மாதமொன்றுக்கு அதிகளவு அலைபேசிக்காக செலவாகும் நாடாக துவாலு காணப்படுகின்றது. அங்கு மாதமொன்றுக்கான குறைந்தபட்ச செலவாக 45.73 அமெரிக்க டொலர்கள் செலவிட நேரிட்டுள்ளது.

நெதர்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன், அன்டோரா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் அலைபேசிக்கான மாதாந்த செலவு அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்தி மற்றும் டேட்டா கட்டணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts