Ad Widget

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று

மூன்றாவது இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நாடு முழுவதும் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 160 தொகுதிகளில் 334 பிரதேச செயலகங்களில் வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது.

இதில் சுமார் 5 இலட்சம் இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.காலையில் ஆரம்பமாகி வாக்கெடுப்பு இன்று மாலை 3 மணி வரை இடம்பெறும் .

யாழ் மாவட்டத்தில் வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்று வருவதுடன் இளைஞர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்வத்துடன் வாக்களிப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

Related Posts