இராணுவப் புலனாய்வாளர்கள் எனக்கூறி வீட்டில் கொள்ளை

robberyஇராணுவப் புலனாய்வாளர்கள் எனக்கூறிய சிலர் உரும்பிராய்ப் பகுதியிலுள்ள வீடொன்றில் 35 பவுண் தங்க நகைகளைத் நேற்று மாலை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளை நிற கார் ஒன்றில் வந்த குறித்த நபர்கள், தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் எனக்கூறி வீட்டினை சோதனையிடுவதாகப் பாசாங்கு செய்து, அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவத்தினால் உரும்பிராய் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.

Related Posts