Ad Widget

இந்திய மீனவர்கள் 34 பேர் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 34 பேர், இன்று செவ்வாய்க்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணக் கடற்பரப்பில் வைத்து செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களும், பருத்தித்துறைக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளில் மீன்பியில் ஈடுபட்ட 10 மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் நாகை மற்றும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, தலைமன்னார்ப் பகுதியில் மீன்பிடித்த 11 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts