Ad Widget

அந்தியேட்டி வீட்டுக்கு சமைக்கச் சென்றவர் திடீர் மரணம்!

அந்தியயேட்டி வீட்டுக்குச் சமைக்கச்சென்றவர் மயக்கமுற்ற நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும் வழியில் மரணமடைந்தார்.

குளப்பிட்டி, கொக்குவில் மேற்கில் உள்ள வீட்டின் இடம்பெறும் அந்தியேட்டிக்கு சமைக்கவென வியாழக்கிழமை இரவு சென்று அங்கு சில பணிகளை மேற்கொண்டு விட்டு இரவு நித்திரைக்குச் சென்றுள்ளார்.

அதிகாலையில் சமையலைத் தொடங்கும் முகமாக ஏனையவர்கள் குறிப்பிட்ட நபரை நித்திரையில் இருந்து எழுப்ப முற்பட்ட வேளையில் அவர் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். அதிகாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும் அவர் மரணம் அடைந்தார்.

ஆனைக்கோட்டை புளியங்கண்டியைச் சேர்ந்த துரைராசா வரதராசா (வயது 59) என்பவரே மரணமானவராவார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரனையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts