மொனறாகலை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவர் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும்போது, அவரிடமிருந்து ஆவணங்கள் சிலவற்றையும் ஒரு இலட்சத்து இருபத்தோராயிரத்து அறுநூறு ரூபாய் பணமும் மீட்கப்பட்டதாக மொனறாகலை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கப் ரக வாகனமொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மொனறாகலை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.