Ad Widget

71 ஆவது சுதந்திரதினம் தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளது

இலங்கையின் 71 ஆவது சுதந்திரதினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8 ஆம் உறுப்புரைக்கமையவே இவ்வாறு கொண்டாப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8 ஆவது உறுப்புரையில் தேசியதினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவால் தேசியதினம் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts