மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றிக்கொண்டுள்ளது.
இச் சம்பவம் அதிகாலை 1 மணியளவில் இத் தீ சம்பவம் ஏற்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர காலை தொடக்கம் நீரினை பீச்சி அடித்தாலும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கப்பலின் இயந்திர பகுதி கடுமையாக தீ பற்றி கொண்டுள்ளது அங்குள்ள டீசல் தாங்கி Gas என்பன உள்ளதால் தீ தொடர்ந்து எரிகிறது. வெடிக்கும் அபாயம் உள்ளது.
இக் கப்பல் தனியார் ஒருவருடையது. சீமெந்து ஏற்றிவர பயன்படுத்திய கப்பலாகும். திருத்த வேலை காரணமா ஒருவருடமா நங்கூரம் இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.