இன்று வடக்கு, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் உஷ்ணமான காலநிலை நிலவும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பொலன்னறுவை மாவட்டத்திலும் கடும் உஷ்ணமான காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும், வௌிக்கள செயற்பாடுகளில் அதிக அளவு ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.