Ad Widget

உறவினர்களுக்கிடையில் கைகலப்பு: ஒருவர் உயிரிழப்பு!

நேரியகுளம், மாங்குளம் பகுதியில் குடும்பத்தினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாங்குளத்தை சேர்ந்த 68 வயதுடைய இஸ்மாயில் சம்சுதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இரவு 8 மணியளவில் நேரியகுளம் மாங்குளம் பகுதியில் உள்ள சம்சுதீன் என்பவரது வீட்டில் உறவினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது சமரசம் செய்வதற்காக முயன்ற இஸ்மாயில் சம்சுதீன் என்பவரது தலையில் சிலர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தினால் தாக்கியதில் அவர் குறித்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அப்பகுதியை சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts