Ad Widget

இந்திய மீனவர்கள் 32 பேர் விடுதலை

கடந்த வருடம் இறுதியில் நெடுந்தீவு கடல்பகுதியில் கைதான இந்திய மீனவர்கள் 32 பேரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, ஊர்காவற்துறை நீதிமன்றினால், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசெம்பர் காலப்பகுதியில் வெவ்வேறு தினங்களில் 6 விசைப்படகுடன் 32 மீனவர்கள் iது செய்யப்பட்டிருந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களது படகுகள் மற்றும் சான்றுபொருட்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

Related Posts