Ad Widget

கடற்படை “ட்ரக்“ மோதி வயோதிபர் மரணம்

தெல்லிப்பழை தபாற்கந்தோர் அருகில் நேற்றுபிற்பகல் கடற்படை “ட்ரக்“ மோதி வயோதிபர் மரணமடைந்துள்ளார்.

தெல்லிப்பளையைச் சேர்ந்த 60வயதுடைய ஐயம்பிள்ளை சற்குணராஜா என்பவரே மரணமடைந்தார். இவ் விபத்து நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்தவர் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிக்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.

Related Posts