யாழ். பல்கலைக்கழகத்துக்கு, 8 மாடிக் கட்டடம் அமைத்துத் தருவதாக, உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளாரென, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
பருத்தித்துறை – மருதங்கேணி வீதி, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்க்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவினரால், புதன்கிழமை (17) திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மாவை. சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார். பல்கலைக்கழகம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, இக்கட்டடம் அமைக்கபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.