வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சகல பட்டதாரிகளுக்கும் விரைவில் வேலை வாய்ப்பினை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி, அகில இலங்கை பட்டதாரிகள் சங்க சமூகத்தின் செயலாளர் தம்பிக்க முனசிங்க தலைமையில் இந்த பேராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலுமுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட வேலையில்லாத பட்டதாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஐனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சருக்கான மகஜர் ஒன்றையும் வடமாகாண வேலையற்றோர் பட்டதாரி சமூகத்தின் தலைவர் தூசாந்தன், தம்பிக்க முனசிங்கவிடம் கையளித்தார்.