Ad Widget

பொன்சேகாவின் சிறை அறை கோத்தபாயவிற்கு தயார்!!

வெலிகடைச் சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தடுத்து வைப்பதற்காக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறை தயார் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் யோஷித்த ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையறைக்கு அருகில் உள்ள சில சிறையறைகளே இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related Posts