எதிர்வரும் 14ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை சையின் அமர்வுக்கு கூட்டமைப்பு உத்தியோக பூர்வ பிரதிநிதிகளை அனுப்புவது குறித்து இன்னும் முடிவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளார்.
இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் சில உறுப்பினர்கள் செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனந்தி ஆகியோர் செல்ல உள்ளதாக வந்த செய்திகளின் பின்னணியில் சுமந்திரனின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது .