Ad Widget

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் 4 லட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் திருட்டு!

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் சுமார் இரண்டு பவுண் நிறையுடைய தங்கச்சங்கி ஒன்றும் மற்றும் ஏழரை பவுண் நிறையுடைய தாலிக்கொடி ஒன்றும் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

பொலிஸார் சிவில் உடையில் கடமையாற்றிய போதிலும் பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படாமையால் பெண்கள் பகுதியில் நடைபெறக் கூடிய இத்தகைய திருட்டுக்களை தடுக்கமுடியாமல் போய்விட்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts