தொழில் போட்டி காரணமாக இ.போ.ச பஸ் சேவையினருக்கும் தனியார் பஸ் சேவையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவம் நேற்று புதன்கிழமை 7 மணியளவில் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை – முல்லைத்தீவு போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச. பஸ், தனியார் பஸ்ஸை முந்திச் சென்றதாலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது எனக் கூறப்படுகின்றது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை நீடித்ததாகவும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.