யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது. எனினும், அது உட்கார்ந்திருக்கும் நிலை மற்றும் எடை என்பனதான் பலரையும் சிந்திக்க வைத்து, ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்த சிலை ஒரு அதிசயம், கடவுள் செயல் என சொல்பவர்களும் உள்ளனர்.
இந்த சிலை விவகாரம் யாழில் காட்டுத்தீ போல் பரவி பலரும் சிலையை பார்க்க பக்தி சிரத்தையுடன் படையெடுக்கிறார்கள்.
ஆனால் இது கடந்த வருடம் ஆவணிச்சதுர்த்தியின் போது கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலை என்று தெரியவருகின்றது .