Ad Widget

வேட்புமனுவில் கைச்சாத்திட்டார் மஹிந்த : குருநாகலில் போட்டி!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார்.

இதனடிப்படையில் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும், நாளைய தினம் அதற்கான வேட்புமனு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக சுசில் பிரேமஜயந்த, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் கூறி வந்தாலும், அது உறுதிப்படுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

ஜனாதிபதி தரப்பிலும் இதுவரை அதனை உறுதிப்படுத்தாக நிலையில், தற்போது மஹிந்த வேட்புமனுவிலும் கைச்சாத்திட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மஹிந்து போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்ற பரபரப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

Related Posts