Ad Widget

தாக்குதலுக்குள்ளான நீதிமன்றம் இராணுவத்தினரால் புனரமைப்பு

கடந்த 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உடைக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் பொருட்களை இராணுவத்தினர் புனரமைப்பு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, நீதிமன்றத்தின் முன்னால் கூடியவர்களில் சிலர் நீதிமன்றத்தின் மீது கற்களை வீசி நீதிமன்ற கண்ணாடிகளை உடைத்தும் பூமரக்களை பிடுங்கி எறிந்தும் வாகனங்களை உடைத்தும் நீர்க்குழாய்களை உடைத்தும் அட்டகாசம் செய்தனர்.

இந்தச் சம்பவத்தால் சேதமடைந்தவற்றை இராணுவத்தினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) புனரமைப்புச் செய்து வருகின்றனர்.

Related Posts