MH 179 விமானம் அவசரமாக தரையிறங்கியதில் மர்மம்

மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான MH 179 என்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது மர்மமாகவே இருக்கின்றது என்று செய்தி வெளியாகியுள்ளன.

விமானம் புறப்பட்டு சில மணி நேரங்களில் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு விமானம் திரும்பியுள்ளது.

மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த விமானம் மலாக்கா நீரிணைக்கு மேலாக இரண்டு மணிநேரம் வட்டமிட்டதன் பின்னரே கோலாலம்பூரில் தரையிறங்கியுள்ளது.

விமானத்தில் கூடுதலாக எரிபொருட்கள் இருந்த நிலையில், அது தரையிறக்கப்பட்டமை ஆபத்தானது என்றும் மலாக்கா நீரிணைக்கு மேலாக விமானத்தை வட்டமடிக்கவேண்டிய நிலைமை விமானிக்கு ஏற்பட்டது என்றும் மலேசியா ஊடகங்கள் தெரிவித்தன.

அதன் பிரகாரம் நேற்றிரவு 11.30க்கு புறப்பட்ட விமானம் மீண்டும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அதிகாலை 1.30க்கு தரையிறங்கியுள்ளது. விமானம் மீண்டும் தரையிறங்கியமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

அது மர்மமாகவே இருக்கின்றது. இந்த விமானம் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.18க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts