Ad Widget

மானிப்பாயில் கைக்குண்டுகள் மீட்பு

மானிப்பாய் பகுதியில் வெற்றுக்காணியில் இருந்து எஸ்.எஸ். ஈ. 87 ரக இரண்டு கைக்குண்டுகள் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு, இராணுவத்தினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.

மானிப்பாய் கட்டுடை பகுதியில் கடந்த வியாழக்கிழமை குறித்த கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தோட்டக்காணிக்கு பக்கத்தில் உள்ள வெற்றுக்காணிக்குள் சென்ற போது, அங்கு இரண்டு கைக்குண்டுகள் இருப்பதை கண்டு, மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் பிரகாரம், நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக இராணுவத்தினர் குறித்த கைக்குண்டினை செயழிலக்க செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts