Ad Widget

நேர்மையே சேவைக்கு உரித்தானது – புதிய யாழ். மாவட்டச் செயலாளர்

மக்களுக்கான சேவையை நேர்மையான வழியில் செய்வதே சிறந்தது என யாழ்.மாவட்டச் செயலராக இன்று புதன்கிழமை (25) கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

vetha-nayagan

யாழ். மாவட்டச் செயலாளராக இதுவரை காலமும் கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு மாற்றலாகி செல்வதையடுத்த, இதுவரை காலமும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகராக கடமையாற்றிய நாகலிங்கம் வேதநாயகன் யாழ். மாவட்டச் செயலாளராக கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய மாவட்டச் செயலாளரை வரவேற்கும் நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (25) நடைபெற்றது.

அங்கு உரையாற்றுகையிலேயே மாவட்டச் செயலாளர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

‘மக்களுக்கான சேவையை நேர்மையாகச் செய்யவேண்டும். உத்தியோகத்தர்கள் அனைவரும் குழுவாக ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே அனைத்து விடயங்களையும் சிறப்பாகச் செய்ய முடியும்.

முன்னைய மாவட்டச் செயலாளருக்கு வழங்கிய ஒத்துழைப்பை எனக்கும் வழங்குவீர்கள் என நான் நம்புகின்றேன். நேர்மையான வழியில் விரைவான சேவைகளை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைத்து தூரநோக்குடன் செயற்படவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் நான் முன்னர் கடமையாற்றியதால் எனக்கு பரீட்சயமான மாவட்டமாக இது உள்ளது. இங்கு என்னால் அனைத்தையும் சிறப்பாகச் செய்ய முடியும் என நம்புகின்றேன்’ என்றார்.

Related Posts