Ad Widget

விபத்தில் இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம், அச்சுவேலி அந்தோனியார் தேவாலய முன்றலில் பஸ் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனொருவர் படுகாயமடைந்த சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையை சேர்ந்த வி.ரவீந்திரன் (30) என்பவரே படுகாயமடைந்தார். வீதியொன்றில் திரும்ப முற்பட்ட பஸ் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இளைஞன் முதலில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts