மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை செத்சிரிபாயவின் புதிய கட்டிடத்தில் உள்ள மகளிர் விகார அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன் போது உரையாற்றிய பிரதியமைச்சர்,
எமது அமைச்சின் ஊடாக வட கிழக்கு உற்பட ஏனைய பிரதேசங்களிலும் துண்பப்பட்ட தமிழ் பேசும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சேவையாற்றவுள்ளதாக தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களிற்கு அமைச்சின் ஊடாக ஆகக் கூடிய நிதியைப் பெற்று கொடுப்பேன்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நான் நன்றி தெரிவிப்பதோடு எனது பிரதியமைச்சர் பொறுப்பிலிருந்து அவர்களது ஆலோசனையையும் பெற்றுக்கொள்வேன்.
குறிப்பாக வடக்கில் வாழ்ந்த மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும். அதற்காக கூடுதலான நிதி மற்றும் ஏனைய அமைச்சர்களின் உதவியையும் பெற்றுக்கொள்ளவுள்ளேன்.
கடந்த போர் காலத்தில் கைது செய்யப்பட்டிருந்த பலஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எவ்வித விசாரனையுமின்றி சிறையில் வாடுகின்றனர். இவர்களது தாய் தந்தையர்கள், மனைவி பிள்ளைகள் மிகவும் துண்ப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இவர்களை உரிய விசாரனைகளை மேற்கொண்டு விடுதலை செய்யப்படல் வேண்டும். எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் ஒரு தொகுதி தமிழ் இளைஞர்கள் விடுதலை பெறுவார்கள்.
அதற்காக ஜனாதிபதி, பிரதமர் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.