யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல் 02 மாத நுகர்வுக்கு மாத்திரமே போதுமானதாக இருப்பதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்திலுள்ள மொத்த சனத்தொகை 6 இலட்சத்து 10 ஆயிரத்து 640 ஆகும். 40 வீதமானவர்கள் நெற்பயிர் செய்கின்றனர். அவர்கள் தமக்கு தேவையான நெல்லை வருடம் முழுவதும் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் மிகுதி 60 வீதமானவர்களின் தேவைக்கு யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யும் நெல் போதுமானதாக இல்லை.
மேலதிக தேவையான அரிசி வெளிமாவட்டங்களிலிருந்தே பெறப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.