Ad Widget

வரலாற்றிலேயே அமைதியாக நடைபெற்ற தேர்தல் இது!

நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை நோக்குமிடத்து ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே வன்முறைகள் குறைந்த, அமைதியான தேர்தலாக இத்தேர்தலை குறிப்பிட முடியுமென தேசிய தேர்தல் கண்காணிக்காளர் மத்திய நிலையம் குழு தெரிவிக்கின்றது.

vote-srilanka

இந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த தேசிய தேர்தல் கண்காணிக்காளர் மத்திய நிலைய தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

1982ஆம் ஆண்டுக்குப்பிறகு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்..

நூற்றுக்கணக்கான நடமாடும் வாகனங்களில் 2500 பேர் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த அனைத்து கடமைகளையும் சரிவர செய்வதற்கு கண்காணிப்புக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கிய தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகள், வாக்காளர்கள் ,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொலீஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடகங்கள் அனைத்துக்கும் தமது குழு, நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts