Ad Widget

த.தே.கூ. முகவர்களை தெரிவு செய்கிறது

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான முகவர்களை தெரிவு செய்வதில், த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கென யாழ். மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கான, முகவர்களைத் தெரிவு செய்வதில் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி வரும் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சில தினங்களுக்கு முன் அறிவித்துள்ளதையடுத்து, யாழ். மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான முகவர்களைத் தெரிவு செய்வதில் த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.

Related Posts