நாட்டின் வடக்கு கிழக்கு பாகங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் இன்று (24) தகவல் தெரிவித்துள்ளது.
இம் மழை வீழ்ச்சியினைத் தொடர்ந்து எதிர்வரும் 26 ஆம் திகதியிலிருந்து மழைவீழ்ச்சி குறைவடைவதற்கான சாத்தியம் நிலவுவதாகவும், ஆயினும் காற்று பலமாக வீசக்கூடிய சாத்தியம் அனைத்து பிரதேசங்களிலும் பொதுவாக நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வட, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கும் சுமார் இம்மழைவீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரைத்தாண்டலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழையும் மின்னலுக்கான சந்தர்ப்பமும் நிலவுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரதான நகரங்களின் காலநிலை
அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 27 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 22 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு சிறிதளவிலான மழைக்கான காலநிலை காணப்படலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 27 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் – மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் சிறிதளவிலான மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படும் .
மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 27 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ்பாகையாகவும் காணப்படும் அதேவேளை சில பகுதிகளில் குறைந்த மழைக்கான சாத்தியம் காணப்படும். கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 28 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 22 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு இரவில் அதிக மழை பெய்யலாம்.
கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 27.5 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 13.9 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.
ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தம்பன்கேணி பிரதேசத்தில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக 139.5 மி.மீற்றர் பதியப்பட்டுள்ளது.