தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 5 ரயில் நிலையங்கள் இன்று புதன்கிழமை தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளன.
இதன்படி உப ரயில் நிலைய அதிபர்களாக நியமனம் செய்யப்பட்ட 5 உப நிலைய அதிபர்களிடம் நேற்று பதில் ரயில் நிலைய அதிபர் (பயணப் பிரிவு) மொகமட் இஸ்மாயில் ஹாரூம் பொறுப்புக்களைக் கையளித்தார்.
கடந்த எட்டாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் உபநிலைய அதிபர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் தச்சன்தேர்பபு உப ரயில் நிலையம், சங்கத்தானை உப ரயில் நிலையம், மீசாலை உப ரயில் நிலையம், மிருசுவில் உப ரயில் நிலையம், எழுதுமட்டுவாழ் உப ரயில் நிலையம் ஆகிய நிலையங்களுக்கே உப நிலைய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இந்த உபநிலையங்கள் இன்று தொடங்கம் இயங்க ஆரம்பித்துள்ளன.