நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியைப் போக்க மழை பெய்ய வேண்டும் என சுமார் ஒரு வாரமாக நடத்தப்பட்ட யாகம் நேற்று சனிக்கிழமை நிறைவடைந்தது.
சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூர் கோவில் வீதியிலுள்ள ராகவேந்திரர் பீட ஜம்புகேஸ்வரரைப் பிரார்த்தித்தே இந்த யாகம் செந்தமிழில் நடத்தப்பட்டது.