Ad Widget

அச்சுவேலியில் வாள்வெட்டு :சந்தேகநபர் இருவர் கைது

அச்சுவேலிப்பகுதியில்   இடம்பெற்ற imagesசம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    இதில் நிக்கோநாதன் அருள்நாயகி (வயது 50),இவரது மகனான நி.சுபாங்கன் (வயது 20), மற்றும் இவரது மகள் யசோதரன் மதுசா (வயது 28) ஆகியோரே கொலை செய்யப்பட்டவர்களாகும்   மேலும் படுகாயமடைந்த நிற்குணாந்தன் தர்மிகா (வயது 25),யசோதரன் வேலன் (வயது 30) ஆகியோர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    குடும்பத்தகராறே இந்த வாள்வெட்டுக்கு காரணம்  என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்  இரு பிரதான சந்தேக நபர்கள் ஊரெழு பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து வாள் மற்றும் ஆட்டோவும் மீட்கப்பட்டது.

Related Posts