Ad Widget

யாழ்.பல்கலையில் நியமனம் பெற்றவர்கள், அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்.பல்கலைக் கழகத்தின் கணனிப் பிரயோக உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ha1

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்பிரகாரம் யாழ்;.பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களுக்கும் கணினிப் பிரயோக உதவியாளர்களாக 32 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், எமது சமூகம் கையேந்தும் சமூகமாக வாழாமல் சொந்தக் கால்களில் நின்று வாழவேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.

அந்தவகையில், நீங்கள் கடமையாற்றும் பணியிடங்களில் மேலதிகாரிகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, யாழ்.பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக்காகவும், உயர்விற்காகவும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதன்போது அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன், ஈ.பி.டி.பியின் பிரதேச இணைப்பாளர்களும் உடனிருந்தனர்.

Related Posts