என் திருமணம் நிற்க இதுதான் காரணம்!

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர நாள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் இந்திய தேசிய கொடியை ஏற்றி தன்னுடைய உரையை பேசியிருந்தார். இந்நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவும் அவரது அம்மாவும் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

முதலமைச்சர் விஜய்யின் பதவி ஏற்பு விழா முதல் சுதந்திர தின நிகழ்ச்சி வரை திரிஷா கலந்து கொண்டது பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு வருண் மணியன் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்து, திருமணம் நின்று போன காரணத்தை திரிஷா கூறியது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் நடிகை திரிஷா, நான் திருமணம் செய்து கொள்ளவிருந்த நபர், என்னிடம் சினிமாவில் நடிப்பதை நிறுத்தும்படி கூறினார். நடிப்பதை கைவிடுவதற்கு பதிலாக திருமணத்தை கைவிட்டுவிட்டேன், அதனால் தான் திருமணம் நின்று போனது.

நான் கர்ப்பமானால் மட்டுமே சினிமாவில் நடிப்பதை நிறுத்துவேன், எனக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பில் கிடைக்கவில்லை என்றாலும், எனக்கு பொருந்தும் ரோல்களில் நடிப்பேன். ஆனால், எந்த காரணம் கொண்டும் சினிமாவில் இருந்து விலகமாட்டேன்.

என் கடைசி மூச்சுவரை சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பேன் என்று திரிஷா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு விவாகரத்தில் நம்பிக்கை என்றும் எப்படி மற்றொருவரை காயப்படுத்தி வாழும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வேண்டாம். திருமணத்திற்கு முன் 100 முறை யோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் திரிஷா.

Related Posts