2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று வியாழக்கிழமை (27) மற்றும் நாளை வெள்ளிக்கிழமை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாதென பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்பட்டுள்ள விஷேட அறிவித்தல் மூலம் இதனை தெரிவித்துள்ள அவர்,
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாதென குறிப்பிட்டுள்ளார்.