நாடு முழுவதும் ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டாய சீட் பெல்ட் பயன்பாடு குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தைத் தொடர்ந்து, கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கூறிய அவர்,
இந்த முன்மொழிவுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தற்போது, குருநாகல் மற்றும் அனுராதபுரம் இடையே மட்டுமே ஆன்லைன் அபராதம் செலுத்தும் முறை உள்ளது.
இப்போது, அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் மொபைல் சாதனங்களை வழங்குகிறோம்.
இதனால் இந்த ஆண்டு முதல், போக்குவரத்து அபராதங்களை மொபைல் போன்கள் மூலம் எங்கிருந்தும் செலுத்த முடியும் – என்றும் கூறினார்.