ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (14) பிற்பகல் ஆனையிறவு உப்பளத்துக்கு விஜயம் செய்த அவர் உப்பளத்தின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்
அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய தொழிற்சாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றும் பருவ கால பணியாளர்களுக்கான உரிய வேதனம் வழங்கப்படாமை மற்றும் உரிய வேலைகள் வழங்கப்படாமை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் போராட்டம் ஒன்ற்றில் ஈடுபட்டுள்ளனர்
குறித்த போராட்டத்தை அடுத்து இன்று பிற்பகல் ஆனையிறவு உப்பளத்திற்கு விஜயம் செய்த இளங்குமரன் அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடி பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அதாவது ரஜ லுனு என்ற பெயர் முன்னர் இருந்த அரசாங்கத்தினால் மன்னர் உப்பளத்தின் பெயரையே சூட்டப்பட்டிருந்ததாகவும் அது தற்போது அந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது
பல கோரிக்கைகளை முன்வைத்து காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்ட அவர்களுக்கான நியாயம் வழங்கப்படும் என்பதுடன் நாட்டின் சகல பகுதிகளுக்கும் உப்பினை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதுடன் குறிஞ்சா தீவு உப்புளத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.