மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனி முன்னெடுப்பு!

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்றை இன்று முன்னெடுத்தது.

அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.

யாழ்., பொது நூலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த நடைபவனி, யாழ், போதனா வைத்தியசாலை வீதியூடாக சென்று மீண்டும் நூலகத்தை வந்தடைந்தது.

இதன் போது தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்தூராசா மற்றும் நான்கு மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி மதகுருமார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts