Ad Widget

நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயம் விரைவில் புனர் நிர்மாணம் செய்யப்படும் – டக்ளஸ்

இன – மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர பேருந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தினை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது.

இதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவு இருக்கிறது. அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இந்த விடயத்தினை என்னோடு இணைந்து அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts