Ad Widget

யாழில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவு : தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் நேற்று காலை தொடக்கம் இன்று காலை வரை 149.3. மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யாழ் நகரப் பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்துவரும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும், வடபகுதியில் 100மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காற்று 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதுடன், மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவவோடு கடல் தொழிலுக்குச் செல்வோர் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் யாழ். பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts