ஹம்பகா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அபாய பிரதேசமான ஹம்பகா மாவட்டத்திலிருந்து குறித்த பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்படாமலிருந்தார்.
இதனையடுத்து குறித்த விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி அவருடைய இருப்பிடத்திலேயே இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கோப்பாய் பிரதேச மருத்து அதிகாரி இதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.