வலிவடக்கு பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில் கம்பங்களை நிறுவி சேவைகளை வழங்குகின்ற தனியார் நிறுவனங்கள் பிரதேசசபையில் முறைப்படி அனுமதி பெறவேண்டும் என வலிவடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
வீதி ஓரங்களில் கம்பங்களை நிறுத்தி சேவைகளை வழங்குதல் தொடர்பான அறிவித்தலில் சபைக்கு சொந்தமான வீதிகள் மற்றும் வீதி அபிவிருத்திசபை வீதி , அபிவிருத்தித் திணைக்களம் ஆகிய திணைக்களகங்களின் பரிபாலணத்திற்குட்பட்ட வீதிகளில் கம்பங்களை நிறுவி சேவைகளை வழங்குகின்ற தனியார் நிறுவனங்கள் பிரதேசசபையில் முறைப்படி அனுமதி பெற்ற பின்பே தமது சேவைகளினை ஆரம்பித்தல் வேண்டும்.
அனுமதியின்றி வீதிகளில் கம்பங்களினை நடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது மீறுவோர் மீது சபையினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.