- Wednesday
- May 14th, 2025

60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்த உற்சவம் நேற்று அதிகாலை தொடக்கம் மாலை வரை தொண்டைமானாறு வரையான பாக்குநீரிணை வங்காள விரிகுடா கடலில் இடம்பெற்றது. வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து சுவாமி எழுந்தருளி கடலில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது. சிம்மராசியில் குரு பகவானும் நிற்க,...

அண்மையில் வெளியான க.பொ.த (உ.த) பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அனுசரணையுடன் இடம்பெற்றது. பாலகன் கல்வி மேம்பாட்டுபிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு அக்கட்சியின் கொள்கை முன்னெடுப்பு பிரிவு இணைப்பாளர் சமயலிங்கம் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். இந்நிகழ்வு நேற்று (31.01.2016)...

எத்தனை இடர்கள் வந்தபோதும் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அடித்தளம். அந்த நம்பிக்கையை நாம் இழந்து மனம் துவண்டுவிழாமல் இருப்பதற்கு விழாக்கள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புளியம்பொக்கணையில் சனிக்கிழமை (31.01..2016) ஹற்றன் நாஷனல் வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு...

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று பிற்பகல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் வடக்கு மாகாணத்தைச்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்புவிழா நேற்றயதினம் (19) ஆரம்பமாகியது. யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்றும் (19) இன்றும் (20) ஆக எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 1939 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர். யாழ் பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற நேற்றய முதல் நாள் அமர்வில் யாழ் பல்கலைக்கழக வேந்தர்...

வல்வெட்டித்துறையில் தமிழ் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட பட்டப்போட்டியினை பார்வையிட பெருமளவில் மக்கள் திரண்டனர். குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் அலையென திரண்டமையால் வல்வெட்டித்துறை கடற்கரை நிரம்பி வழிந்தது. தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையினில் வித விதமான பட்டங்கள் போட்டியில் பங்குபற்ற வைக்கப்பட்டிருந்த நிலையினில் வடக்கு முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். சிறார்களினை தாண்டி வயது...

இம்முறை தேசிய பொங்கல் தின நிகழ்வுகள் நேற்று (15) யாழ்ப்பாணத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றன. நேற்று காலை யாழ் பலாலியில் அமைந்துள்ள சிறி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க...

பாடசாலை மாணவரிடையே தேசிய இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிற்கான பொங்கல் நிகழ்வொன்று யாழ் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நேற்று (15) இடம்பெற்றது. வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் தலைவியுமான சந்திரிக்கா...

தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (30.12.2015) பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார்....

பேரிடர் நினைவுநாள் படைத்தரப்புக்குரிய தினம் அல்ல. இதனை இராணுவத்துக்குரிய தினம்போலக் கொண்டாடுவது தவறானது என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கரைச்சிப் பிரதேசசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (26.12.2015) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத்தினம் பிரகடனப்பட்டிருப்பதன் நோக்கம்,...

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய கடற்கோளின்போது, இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 40,000 பேர் வரையில் பலியாகினார்கள். முல்லை மாவட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் உயிர் துறந்தார்கள். அவர்களுக்கான நினைவஞ்சலி, கடற்கோள் நினைவுதினமான நேற்று சனிக்கிழமை (26.12.2015) முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கோள் நினைவாலயத்தில் நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் ஆகிய மூன்று மதமுறைகளிலும் இடம்பெற்ற...

புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புங்குடுதீவு கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (24.12.2015) விவசாயிகளைச் சந்தித்து முட்கம்பிச் சுருள்களை வழங்கி வைத்துள்ளார். புங்குடுதீவில் கட்டாக்காலி மாடுகளால் நெற்செய்கை பாதிக்கப்படுவது விவசாய சம்மேளனங்களால் வடக்கு விவசாய அமைச்சரின் கவனத்துக்குக்...

வவுனியாவில் சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையும் படங்களும்

குடும்ப சமாதானத்தை மேம்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் CCH நிறுவனமானது KNH இன் அனுசரணையுடன் பெண்கள் வன் முறைக்கெதிரான ஊர்வலத்தினை 09.12.2015 இன்று மேற்கொண்டனர். நவம்பர் 25 ஆம் திகதிதொடக்கம் டிசெம்பர் 10 திகதி வரையான காலப்பகுதியினை ORANGE THE WORLD பெண்கள் வன்முறைக்கெதிரான வாரமாக ஐக்கிய நாடுகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று நடைபெற்ற ஊர்வலமானது ORANGE...

இளைஞர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்று இனி யாரும் கூற முடியாது, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். மாணவர்கள் நினைத்தால் முடியாதது ஏதும் இல்லை, என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் சிங்கப்பூர் நாட்டின் நேஷனல் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள். ஒரு ஆண்டாக இவர்கள் பணியாற்றி வந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பதோடு அனைவரையும் திரும்பி பார்க்கவும்...

All posts loaded
No more posts