ஆசிரியர்கள் மாணவர்களின் இலட்சிய வழிகாட்டிகளாகத் திகழவேண்டும்

ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டிகள். மாணவர்களுக்கு பாடங்களைத் தெளிவாகப் புரியவைத்துப் பரீட்சைகளில் சித்திஅடைய வைப்பதில் வழிகாட்டிகளாக விளங்குகின்றார்கள். இது வாழ்வதற்கு உழைப்பதற்கு அவசியமானது. ஆனால், இது மட்டும் போதாது. மாணவன் வாழ்க்கையிலும் நல்லதொரு மனிதனாக வெற்றிபெற வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் இலட்சிய வழிகாட்டிகளாகவும் திகழவேண்டும் என்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிசன்...

வடக்கில் பால் உற்பத்தியில் 40 விழுக்காடு பால் வெளியே செல்கிறது

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுப்பாலில் 40 விழுக்காடு பால் வடக்கைவிட்டு தனியார் நிறுவனங்களால் வெளியே எடுத்துச்செல்லப்படுவதாக கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (04.05.2016) கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது...
Ad Widget

இரண்டு தேசங்கள் ஒருநாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நடாத்திய பாட்டாளி வர்க்க மக்களின் மே தினம் 2016 எழுச்சி நிகழ்வு பருத்தித்துறை சிவன் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இறைமையுள்ள தமிழ் தேசத்தின் அங்கீகாரம் என்பவற்றை வலியுறுத்தி கட்சியின் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில் ஈகைச்சுடரினை...

அலையெனத் திரண்ட கூட்டுறவாளர்களால் அதிர்ந்தது கிளிநொச்சி நகரம்

கிளிநொச்சி நகரமே அதிர்ந்தது என்று வர்ணிக்கும் அளவுக்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை (01.05.2016) கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்த மேதினப்...

இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும் வடக்கில் காணிகள் அபகரிப்பு

வடக்கில் இராணுவத்துக்கென்று ஒருபுறம் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதேசமயம், இன்னொருபுறம் இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளளார். மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29.04.2016) விவசாயிகளுக்கான நடுகைப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு...

மல்லாவியில் விவசாய அமைச்சால் விதைகள் விநியோகம்

முல்லைத்தீவு மல்லாவியில் வடக்கு விவசாய அமைச்சால் விவசாயிகளுக்கு சிறுபோகத்துக்கான விதைகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (23.04.2016) நடைபெற்றுள்ளது. மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான விதைகளை வழங்கிவைத்துள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து முல்லை...

வடக்கு விவசாய அமைச்சால் வவுனியாவில் 641பேருக்கு வாழ்வாதார உதவிகள்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மூலம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 641பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (20.04.2016) நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு விவசாய அமைச்சால் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின்...

வடக்கு மாகாணசபையின் நியமனங்கள் நீதியான முறையிலேயே இடம்பெறுகின்றன

வடக்கு மாகாணசபையின் மூலம் வழங்கப்படும் நியமனங்களில் எமக்குத் தெரிந்தவர், எமக்கு வாக்களித்தவர் என்று எந்த முன்னுரிமைகளும் வழங்கப்படுவதில்லை. பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நீதியரசர் ஒருவரை முதல்வராகக்கொண்டு இயக்கப்படும் மாகாண நிர்வாகத்தில் நியமனங்கள் யாவும் நீதியான முறையில் தகுதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையால் முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், அலுவலகப்...

வடக்கு கால்நடை அமைச்சால் கோழிக்குஞ்சுகள் விநியோகம்

கிராமப்புற மக்களின் போசாக்கு மட்டம் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் கோழிக்குஞ்சுகளை விநியோகிக்கும் திட்டத்தை வடமாகாண கால்நடை அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,கூட்டுறவு அபிவிருத்தி,உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த சனிக்கிழமை (16.04.2016) வேலணையில் தொடக்கி வைத்துள்ளார். வேலைணையில் கமநல சேவைகள்...

நீருக்குள் மூழ்கிய கிராமம் முழுமையாக வெளிவந்த அதிசயம் (படங்கள்)

அண்மைக்காலமாக நாட்டில் காணப்படும் தொடர் வரட்சியால் மலையகத்தில் நீர்தேக்கங்கள் வற்றி வருகின்றன. இந்த நிலையில் மலையகத்தில் உள்ள மஸ்கெலியா, மவுசாகலை நீர்த்தேக்கமும் தற்போது முற்றாக வற்றியுள்ளது. இந்த நீர்தேக்கம் அமைக்கும் போது நீருக்குள் சங்கமமான பழைய மஸ்கெலியா நகரத்தின் பாகங்கள், வரலாற்றுமிக்க கோயில், விகாரை, பாலங்கள், முஸ்லிம்பள்ளி வாசல், பிள்ளையார் கோவில், கிருஸ்தவ தேவாலயம் உட்பட...

நூறுநாள் வேலைத்திட்டத்தை இந்த ஆண்டிலும் முன்னெடுக்க வேண்டுமேன கூட்டுறவாளர்கள் அமைச்சர் ஐங்கரநேசனிடம் கோரிக்கை

கூட்டுறவு அமைச்சால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டத்தைப்போன்று கூட்டுறவு அமைப்புகளின் அபிவிருத்தி கருதி இந்த ஆண்டும் நூறுநாள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு கூட்டுறவாளர்கள் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (05.04.2016) கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில்...

வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்ப நிகழ்வு!

தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமான வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கை நேற்று முன்தினம் பி.ப 3.00 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வீட்டுத் தோட்டப்பயிர்கள் மாவட்ட...

அவுஸ்திரேலியாவில் உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தியின் ஆவணப்படம் நூல் வெளியீடு

உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் பற்றி தெட்சணாமூர்த்தி அறக்கட்டளையின் ஆதரவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளி அம்ஷன்குமார் தயாரித்த ஆவணப்படமும் மற்றும் 'தெட்சணாமூர்த்தி: எட்டாவது உலக அதிசயம்'எனும் நூல் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ தூங்க்காபி சமூக...

பிரதமர் ரணிலுக்கு இன்று பிறந்தநாள்

லேக் நிறுவனத்தை ஸ்தாபித்து இலங்கையில் ஊடகத்துறைக்கு அடித்தளமிட்ட எஸ்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நாலனி விக்கிரமசிங்க ஆகியோருக்கு மகனாக 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிறந்தார். ரோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்த அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்திருந்தார். பின்னர் சட்டக் கல்லூரி மூலம் சட்டத்தரணியாக...

அமைச்சர் விஜயகலாவின் புதல்விகளின் நடன அரங்கேற்றத்தில் மைத்திரி, ரணில், சம்பந்தன் பங்கேற்பு!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. பரதநாட்டிய மாணவிகளான பவதரணி மகேஸ்வரன், பவித்ரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றமே நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,...

மன்னாரில் நெல் கொள்வனவு ஆரம்பம்- அமைச்சர் ஐங்கரநேசன் பார்வையிட்டார்

மன்னார் மாவட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் சபையால் நெல் கொள்வனவு ஆரம்பமாகியுள்ளது. இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த திங்கட்கிழமை (14.03.2016) சென்று பார்வையிட்டுள்ளார். வடக்கில் நெல் உற்பத்தி இம்முறை அதிகமாக இருந்தபோதும் நெல்லைச் சந்தைப்படுத்த முடியாமல் இருப்பதாக வடக்கு முதலமைச்சரும் விவசாய அமைச்சரும் அண்மையில் பிரதம மந்திரியைச் சந்தித்துத் தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போது, இது வடக்குக்கு மாத்திரம்...

வடமாகாண விவசாயக் கண்காட்சி மன்னாரில் ஆரம்பம்

வடமாகாண விவசாயக் கண்காட்சி மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (14.03.2016) ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், ஸ்ரீ.சாந்தி, வடமாகாண...

மாற்றத்துக்கான கருவியாய் பறை ஓங்கி ஒலிக்கட்டும்- பொ.ஐங்கரநேசன்

பறை தமிழினத்தின் தொன்மையான அடையாளம். ஆதித் தமிழ்ச்சமூகத்தின் தகவல் தொடர்பு சாதனம். நாடி நரம்பெங்கும் முறுக்கேற்றும் அந்தப்பறை அரசியல் தொடங்கிப் பண்பாடு வரை தமிழ்மக்களின் சகல வாழ்வியற் தளங்களிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாய் மீளவும் ஓங்கி ஒலிக்கட்டும். இவ்வாறு வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ் என்டர்டெயின்ற்மென்ற் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு புத்தர்...

கிளிநொச்சியில் கால்நடைத்தீவன உற்பத்திப் பயிற்சி

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைகளுக்குரிய பசும்தீவனத்தை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சி கடந்த வியாழக்கிழமை (18.02.2016) கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாகப் பயிற்சியை ஆரம்பித்து வைத்தார். வடமாகாண விவசாய அமைச்சு கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 14 கால்நடை வளர்ப்பாளர்களுக்குத் தலா 70,000ரூபா பெறுமதியான புல் நறுக்கும்...

மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன – பொ.ஐங்கரநேசன்

மற்றவர் வளர்ச்சி கண்டு மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (12.02.2016) இடம்பெற்ற வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு உரையாற்றும்போது, வெற்றி தோல்விகளைச்...
Loading posts...

All posts loaded

No more posts